அஞ்சாதீர்கள், என்ற வானதூதர்களின் கிறிஸ்து அறிவிப்பு, இடையர்களுக்கு, அமைதியையும், நல்லெண்ண எதிர்பார்ப்பையும், தந்தது. தமது வார்த்தையிலும், வாழ்விலும், நல்ல, நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்களை, அமைதியும், நல்லெண்ணமும் எப்போதும் ஆட்கொள்வதை நாம் காணமுடியும். நாம் பகிரும் செய்திகள், பிறருக்கு, நல்ல மனநிலையை உருவாக்குவதாக இருந்தால், பகிர்வது நல்லது. தேவையற்ற வதந்திகளையும், பிறரை துன்பத்தில், மனக்கவலைகளில் ஆழ்த்தும், அடிப்படை ஆதாரமற்ற, புனைவுக் கதைகளை, நமது உரையாடல்களில் தவிர்ப்போம். எண்ணங்களை எச்சரியுங்கள், அவை, வார்த்தைகளைக் கண்காணிக்கட்டும். இறை தூதர்களின் வாழ்த்துமொழி, நமக்கொரு எடுத்துக்காட்டாக அமையட்டும். நல்லெண்ணங்களை வளர்ப்போம். நம் வாழ்த்தொலி, பிறரின் வாழ்த்தொலியோடு இணையட்டும். அமைதி உரித்தாகுக.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |