டிச.01,2016. சிறுவர் சிறுமியர் படைவீரர்களாகப் பயன்படுத்தப்படும் கொடுமையைக் களைவதற்கு நாம் செபிக்கவேண்டும் என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டிசம்பர் மாத செபக்கருத்தாக ஒரு காணொளி செய்தி வழியே வெளியிட்டுள்ளார்.
நுணுக்கமானத் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு, விற்கப்படும் ஆயுதங்கள், சிறுவர், சிறுமியரின் கரங்களில் சென்றடைகின்றன என்று, திருத்தந்தை இக்காணொளிச் செய்தியின் துவக்கத்தில் கூறுகிறார்.
இவ்வகையான அடிமைத்தனத்திலிருந்து, சிறுவர், சிறுமியரை மீட்டு, அவர்களுக்கு உரிய மாண்பை வழங்குவதற்கு, நம்மால் இயன்ற அளவு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை வேண்டுகோள் விடுக்கிறார்.
இவ்வுலகமெங்கும், சிறுவர் சிறுமியர் படைவீரர்களாக்கப்படும் கொடுமை நீக்கப்படவேண்டும் என்பதை, தன் டிசம்பர் செபக்கருத்தாக வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த என் கருத்தில் இணைவதற்கு விருப்பமானால், என்னோடு இணைந்து செபியுங்கள் என்ற விண்ணப்பத்தோடு இந்தக் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |