2016-11-28 17:11:00

பிலிப்பீன்சில் கோவில் குண்டு வெடிப்பு, கர்தினால் கண்டனம்


நவ.,28,2016. பிலிப்பீன்சின் தென்பகுதியில் ஒரு கத்தோலிக்கக் கோவிலுக்கு வெளியே, குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றூள்ளது குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு கர்தினால்.

இஞ்ஞாயிறு திருப்பலிக்குப்பின் எஸ்பெரான்ஸா நகர் கத்தோலிக்கக் கோவிலுக்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்ட Cotabato பேராயர், கர்தினால் Orlando Quevedo அவர்கள், ஒரு புனித இடத்தில், ஒரு புனித நாளில், புனித நிகழ்வு ஒன்றிற்குப் பின் இடம்பெற்ற இத்தாக்குதல், மிகவும் கண்டனத்துக்குரியது என்றார்.

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, காலை திருப்பலிக்குப்பின், மக்கள் கோவிலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றது.

ஆதாரம் :  UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.