2016-11-23 15:51:00

14வது உலக ஆயர்கள் மாமன்ற செயலகத்தின் பொதுக்குழு கூட்டம்


நவ.23,2016. 14வது உலக ஆயர்கள் மாமன்ற செயலகத்தின் பொதுக்குழு கூட்டம், நவம்பர் 21, 22 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், வத்திக்கானில் நிகழ்ந்தது.

இச்செயலகத்தின் பொதுச் செயலர், கர்தினால் Lorenzo Baldisseri அவர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால்களை இப்பொதுக்குழு கூட்டத்தில் வரவேற்றார்.

அடுத்து நிகழவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, "இளையோர், நம்பிக்கை, மற்றும் அழைப்பை தேர்ந்து தெளிதல்" என்ற மையக்கருத்தையொட்டி, அனைத்து ஆயர் பேரவைகளுக்கு அனுப்ப வேண்டிய கேள்வித்தொகுப்பு  குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உடன் பிறந்த உணர்வுடன் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற கருத்துக் பரிமாற்றத்திற்கு திருத்தந்தை நன்றி தெரிவித்ததோடு, இந்த இருநாள் கூட்டம் நிறைவு பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.