2016-11-22 15:17:00

ஆழ்தியான துறவு சபையினரை நன்றியோடு நினைவுகூர்வோம்


நவ.22,2016. “வரும் ஆண்டுகள், இரக்கத்தால் நிறைந்திருக்க வேண்டுமென்று எவ்வளவு ஆவல் கொள்கிறேன், இதனால், ஒவ்வொரு மனிதரும், கடவுளின் நன்மைத்தனத்தையும், கனிவையும் அனுபவிக்க இயலும்” என்ற சொற்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், இத்திங்கள் மாலையில் வெளியான, திருத்தந்தையின் டுவிட்டரில், “திருஅவைக்காகவும், உலகுக்காகவும் செபிக்கும், ஆழ்தியான துறவு சபையினர் மற்றும் ஆசிரமத் துறவு வாழ்வு வாழ்பவர்களை நன்றியோடு நினைவுகூர்வோம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

நவம்பர் 21, இத்திங்களன்று, ஆழ்தியான மற்றும் ஆசிரமத் துறவு சபையினர் தினம் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தையும், தனது டுவிட்டரில், அச்சபையினரை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.