2016-11-19 16:29:00

புதிய கர்தினால்கள் முன்னாள் திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.19,2016. நவம்பர் 19, இச்சனிக்கிழமை காலை, திருவழிபாட்டுச் சடங்கின் வழியாக கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 17 திருஅவை அதிகாரிகளுடன், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சென்று சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2013ம் ஆண்டு திருஅவையின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று, தற்போது வத்திக்கான் நாட்டிற்குள்ளேயே வாழ்ந்துவரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கடந்த மூன்றாண்டுகளில் ஒரு சில முக்கிய பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்.

முன்னாள் திருந்தந்தையை அவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கேச் சென்று சந்தித்து, ஆசி பெற்ற புதிய கர்தினால்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உடன் சென்றிருந்தார்.

இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்களுள், பங்களாதேசின் டாக்கா பேராயர், கர்தினால் பேட்ரிக் டி ரோசாரியோ அவர்களும், மலேசியாவின் ஓய்வு பெற்ற பேராயர் கர்தினால் ஆன்டனி சொத்தேர் ஃபெர்னான்டஸ் அவர்களும், உள்ளடங்குவர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.