2016-11-17 15:22:00

உலக அரசுகள் அதிகமாக நிதி ஒதுக்கவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்


நவ.17,2016. காலநிலை மாற்றத்தால் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்க்க, குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் இப்பிரச்சனைகளைத் தீர்க்க, உலக அரசுகள் இன்னும் அதிகமாக நிதி ஒதுக்கவேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

மொரோக்கோ நாட்டில் நடைபெறும் COP22 உச்சி மாநாட்டில், நவம்பர் 16, இப்புதனன்று உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், பாரிஸ் மாநகரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில், உலக நாடுகள் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தடுத்து, மனித சமுதாயத்திற்கு உகந்த ஓர் உலகை உருவாக்க, அடுத்த 15 ஆண்டுகளில் உலக அரசுகள் ஒன்றிணைந்து, 90,000 கோடி டாலர்களை பயன்படுத்தவேண்டியிருக்கும் என்று, ஐ.நா. பொதுச் செயலர், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.