2016-11-16 16:45:00

Focolare இயக்கத்திற்கு இத்தாலிய அரசுத்தலைவரின் வாழ்த்து


நவ.16,2016. "அமைதியை மீண்டும் கண்டுபிடிக்க" என்ற மையக்கருத்துடன், யுனெஸ்கோ தலைமையகத்தில் கூடியுள்ள Focolare இயக்கத்திற்கும், New Humanity அமைப்பினருக்கும் இத்தாலிய அரசுத்தலைவர், Sergio Mattarella அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

தன் வாழ்வாலும், அயராத உழைப்பாலும் அமைதியை கட்டியெழுப்பப் பாடுபட்ட Chiara Lubich அவர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன், "அமைதிக்கான கல்வி" என்ற விருதினை, யுனெஸ்கோ வழங்கியது, மிகவும் பொருத்தமானது என்று, அரசுத்தலைவர் Mattarella அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

போர்களும், வன்முறைகளும் நிறுத்தப்படுவது மட்டும் அமைதியை நிலைநாட்டாது, மாறாக, சமுதாய நீதி, படைப்பின் பாதுகாப்பு, பிற இனத்தவர் மீது மரியாதை, பல்சமய உரையாடல் என்ற பல வழிகளில், அமைதி, இவ்வுலகில் உறுதி செய்யப்படவேண்டும் என்று, அரசுத்தலைவர் Mattarella அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

அமைதியின் அடிப்படை சவால் மாற்றம் என்று தன் செய்தியில் கூறியுள்ள Mattarella அவர்கள், ஐரோப்பிய சமுதாயம் மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான துணிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.