2016-11-15 16:36:00

தினமும் ஓர் இரக்கச் செயல், உலகில் புரட்சிக்கு வித்திடும்


நவ.15,2016. "நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், ஓர் இரக்கச் செயல் செய்தால், அது, இவ்வுலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும்" என்ற வார்த்தைகள், இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக வெளியிடப்பட்டன.

மேலும், திருப்பீடத் தலைமையகத் தலைவர்களை, இத்திங்கள் காலையில், வத்திக்கானின் பொலோஞ்ஞா அறையில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தில் எடுத்துவரும் முயற்சிகள், மற்றும், அதன் கொள்கைகளை, நடைமுறைப்படுத்துவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வப்போது,  திருப்பீடத் தலைமையகத் தலைவர்களுடன் கூட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.