2016-11-15 16:20:00

சிறப்புக் குழந்தைகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஓட்டம்


நவ.15,2016. சென்னையில் 4 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் கே.ஆர்.எம். பள்ளிக் குழுமங்களில் ஒன்றாக இயங்கிவரும் கே.ஆர்.எம். சிறப்புப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்திய தேசியக் குழந்தைகள் தினமான இத்திங்களன்று, சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலையில் தொடங்கி விவேகானந்தர் இல்லம்வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரம் சிறப்புக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பான விழிப்புணர்வு ஓட்டத்தில் 23 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கு பெற்றனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறன் கொண்ட சிறார், இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : தி இந்து /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.