2016-11-10 15:58:00

உங்கள் கண்களில் உள்ள என் வார்த்தை,திருத்தந்தையின் புதியநூல்


நவ.10,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரெஸ் பேராயராக பணியாற்றிய வேளையில் அவர் வழங்கிய அனைத்து உரைகளின் தொகுப்பு, இயேசு சபையினரின் பொதுப் பேரவையில், நவம்பர் 10, இவ்வியாழன் மதியம் ஒரு நூலாக வெளியிடப்பட்டது.

"உங்கள் கண்களில் உள்ள என் வார்த்தை, புவனேஸ் அயிரஸ் மறையுரைகளும், ஏனைய உரைகளும்" என்ற தலைப்பில் வெளியான இந்நூலில், கர்தினால் பெர்கோலியோ அவர்கள், 1999ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டு முடிய வழங்கிய அனைத்து உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூல் வெளியீட்டு விழாவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அறிமுக உரை வழங்கியபின், சிக்காகோ பேராயர் ஜோசப் ப்ளேஸ் குப்பிச் அவர்களும், இயேசு சபை உலகத் தலைவர் அருள்பணி ஆர்த்தூரோ சோசா அவர்களும், இந்நூல் வெளியாக பல வழிகளிலும் உறுதுணையாக இருந்த அருள்பணி அந்தோனியோ ஸ்பதாரோ அவர்களும் உரையாற்றினர்.

1004 பக்கங்கள் கொண்ட இந்நூலை, இத்தாலிய மொழியில் Rizzoli என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.