அக்.17,2016. ஏழ்மைக்கு எதிரான போராட்டத்தில், நம் அனைவரின் நன்னெறி, மற்றும் பொருளாதார சக்திகளை ஒன்றிணைத்துச் செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 17ம் தேதி இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட ஏழ்மைக்கு எதிரான உலக நாளைக் குறிப்பிட்டு, நம் சகோதர சகோதரிகளுள் எண்ணற்றோரின் உயிரிழப்புக்கும், காயங்களுக்கும் காரணமாகும் ஏழ்மையை எதிர்த்துப் போராட ஒன்றிணைவோம் என விண்ணப்பித்தார்.
மேலும், ஞாயிறு திருப்பலியில் கலந்துகொண்ட அர்ஜென்டினா, இஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, புதிய புனிதர்களின் எடுத்துக்காட்டு, தலத்திருஅவைகளுக்கும், மக்கள் சமூகங்களுக்கும் உதவுவதாக எனவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |