2016-10-15 16:55:00

Jowai மறைமாவட்ட புதிய ஆயர் Victor Lyngdoh


அக்.15,2016. இந்தியாவின் மேகாலயா மாநிலத்திலுள்ள Jowai மறைமாவட்டத்திற்கு, ஆயர் Victor Lyngdoh அவர்களை, புதிய ஆயராக, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாள்வரை, Nongstoin மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் Victor Lyngdoh அவர்கள், மேகாலயா மாநிலத்தின்  Wallangல்  1956ம் ஆண்டு சனவரி 14ம் நாள் பிறந்தார். இவர், 1987ம் ஆண்டில், ஷில்லாங் உயர்மறைமாவட்டத்திற்கு, அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார். 2006ம் ஆண்டு சனவரி 28ம் தேதி, Nongstoin ஆயராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது, Jowai ஆயராக, திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்திய ஆயர் பேரவையின் விவிலிய ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார் ஆயர் Victor Lyngdoh.

மேலும், மேகாலயா மாநிலத்திலுள்ள Nongstoin மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, ஷில்லாங் பேராயர் Dominic Jala அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 








All the contents on this site are copyrighted ©.