2016-10-11 15:00:00

இது இரக்கத்தின் காலம் : நமது கண்ணாடி பிம்பங்கள், குழந்தைகள்


வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார் ஒரு வீட்டுத்தலைவி. நான்கு வயதான அவரது மகளும், அவரோடு சேர்ந்து உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும், விருந்தாளிகளைப் பற்றி எரிச்சலுடன் முணுமுணுத்ததை மகள் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால் செபம் சொல்லும்மா" என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா எப்படி செபம் சொல்வாங்களோ அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று வேண்டிக்கொண்டாள்.

நமது கண்ணாடி பிம்பங்கள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது செய்வது எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.