அக்.08,2016. நம் அன்னை, இயேசு என்ற மாபெரும் கொடையை நம் அனைவருக்கும் வழங்க விரும்புகிறார்; இயேசுவோடு, அவரின் அன்பு, அவரின் அமைதி மற்றும், அவரின் மகிழ்வை நமக்கு, நம் அன்னை கொண்டு வருகிறார் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியாயின.
இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, அன்னை மரியாவின் யூபிலி இவ்வெள்ளியன்று தொடங்கி, இஞ்ஞாயிறன்று நிறைவுபெறும்வேளை, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், அன்னை மரியாவைப் பற்றியதாக அமைந்துள்ளது.
அன்னை மரியாவின் யூபிலியை முன்னிட்டு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இச்சனிக்கிழமை மாலை, 5.30 மணிக்கு, மாலை திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறு காலை பத்து முப்பது மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருப்பலி நிறைவேற்றி, அன்னை மரியாவின் யூபிலியை நிறைவு செய்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |