2016-10-04 16:33:00

செய்தியாளர்களுக்காகச் செபிக்க திருத்தந்தை அழைப்பு


அக்.04,2016. செய்தியாளர்கள், தங்கள் பணிகளை ஆற்றும்போது, உண்மை மற்றும் உறுதியான நன்னெறி உணர்வை மதிப்பவர்களாய் எப்போதும் செயல்படுவதற்கு, அவர்களுக்காகச் செபிக்குமாறு, அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் மாதத்தின், இந்த தனது செபக் கருத்தை, காணொளிச் செய்தி வழியாக விளக்கியுள்ள திருத்தந்தை, கலாச்சாரச் சந்திப்புப் பணியில், ஊடகத்துறையை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதை நான் அடிக்கடி சிந்தித்தது உண்டு என்றும் கூறியுள்ளார்.

மனித சமுதாயம், இப்பூமிக் கோளம், இவையிரண்டின் நன்மைக்கு இட்டுச்செல்லும் தகவல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன என்றும், எனவே செய்தியாளர்களுக்காகச் செபிக்க உங்களனைவரையும் கேட்கின்றேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்தச் செப விண்ணப்பத்தைப் பரப்புவதற்கு எனக்கு உதவுவீர்களா? என்ற கேள்வியுடன், இக்காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.