2016-10-03 16:16:00

அப்பாவி மக்களை அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறேன்


அக்.03,2016. "உலகின் பல பகுதிகளில், மோதல்களால் துன்பங்களையும், கவலைகளையும் தாங்கி வாழும் அப்பாவி மக்களை, நான், அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறேன்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இத்திங்களன்று வெளியிட்டார்.

அசர்பைஜான் நாட்டில், இஸ்லாமியத் தலைவர்களை சந்திக்கச் சென்றவேளையில், "நான் பெற்ற வரவேற்பிற்கு நன்றி, திறந்த மனம், மதிப்பு, பகிர்வு என்ற வழிகளை நீங்கள் தெரிவு செய்யுமாறு உங்களை நான் ஊக்கப்படுத்துகிறேன்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமை தொழுகைக் கூடத்தின் வரவேற்பு நூலில் தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டார்.

மேலும், உரோம் நகரின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான, “Castel Sant’Angelo”வின் ஓவியம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமை மசூதியின் தலைவரிடம் பரிசாக அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.