2016-10-02 12:22:00

அமலஅன்னை ஆலயத்தில் திருத்தந்தையின் மூவேளை செப உரை


அக்.02,2016. பல ஆண்டுகளாக பெரும் இன்னல்களுக்கு உள்ளான இந்நாட்டில் நிலவும் நம்பிக்கை, அற்புதங்களை செய்துள்ளது. இறைவனில் நம்பிக்கை கொண்டு எதிர்ப்புக்களைச் சந்தித்த பல துணிவுள்ள கிறிஸ்தவர்களை நினைவுகூர விரும்புகிறேன். "நம்பிக்கை கொண்டுள்ள உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும்" என்று (1 பேதுரு 2:7) திருத்தூதர் பேதுரு சொன்னதை, புனித 2ம் ஜான்பால் அவர்களும் உங்களிடம் கூறினார்.

இந்நாட்டில் கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாமல், மற்றவர்களும் வணங்கும் கன்னி மரியாவின் மீது நம் எண்ணங்கள் திரும்புகின்றன. அவருக்கு வானதூதர் கபிரியேல் கொணர்ந்த நற்செய்தியை நாமும் அந்த அன்னையிடம் கூறுகிறோம்.

பரிவுள்ள அந்த அன்னையின் பார்வையிலிருந்து வெளியாகும் ஒளியில், அசர்பைஜான் விசுவாசிகளை நான் வாழ்த்துகிறேன். இந்நாட்டில் பணியாற்றும் சலேசிய குழுமத்தையும், பிறரன்பு மறைப்பணியாளர் அருள் சகோதரிகளையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் குடும்பங்களில் உள்ளோர், நோயுற்றோர், முதியோர், இன்னும் உடலாலும், மனதாலும் துன்புறுவோர் அனைவரையும் இறைவனின் அன்னை பாதுகாப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.