2016-09-23 16:02:00

திருத்தந்தை - "இறைவன் சலிப்படையாமல் மன்னிப்பை வழங்குகிறார்"


செப்.23,2016. "நாம் ஒவ்வொரு முறையும் இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது, அவர் ஒருபோதும் சலிப்படையாமல் மன்னிப்பை வழங்குகிறார்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்திருந்தன.

ஒவ்வொரு நாளும் திருத்தந்தை, @pontifex என்ற முகவரியில் வெளியிடும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு, அரேபியம் ஆகிய மொழிகள் உட்பட, ஒன்பது மொழிகளில் வெளியாகிவருகின்றன.

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 22ம் தேதி முடிய வெளியான செய்திகள், 950 என்பதும், அவரை டுவிட்டர் பக்கத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 9,827,306 என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், "தண்ணீர் குறித்து இவ்வுலகில் உருவாகும் போட்டிகளை மனதில் கொண்டு, தண்ணீரைப் பயன்படுத்துவதில் தகுந்த கவனத்துடன் நம் தேவைகளை முதன்மைப்படுத்தவேண்டும்" என்ற கருத்தை, திருப்பீடச் செயலகம், இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.