2016-09-12 16:33:00

விளையாட்டு, வளர்ச்சிக்கும் நட்புணர்வுக்கும் ஒரு வாய்ப்பு


செப்.12,2016.  பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனேரோவில் இடம்பெறும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இத்திங்களன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாற்றுத்திறனாளிகளுக்கென இம்மாதம் 7ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ரியோ தெ ஜெனேரோவில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களுக்குத் திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'பாராலிம்பிக்கில் பங்குபெறும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் வாழ்த்துக்கள், விளையாட்டு என்பது வளர்ச்சிக்கும் நட்புணர்வுக்கும் ஒரு வாய்ப்பு' என கூறியுள்ளார்.

இதற்கிடையே, திருத்தந்தைக்கு ஆலோசனை கூறும் கர்தினால் அவை கூட்டம் இத்திங்களனறு துவங்கியது. 9பேர் கொண்ட ஆலோசனை அவையின் இந்த 3 நாள் கூட்டம், புதனன்று நிறைவுக்கு வரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.