2016-09-06 16:51:00

ஐந்து ஆண்டுகளில் 5000 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்


செப்.,06,2016. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 1770 குடும்பங்களைச் சேர்ந்த 4780 புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு திரும்பி உள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு பெருமளவிலான புலம்பெயர்ந்தோர் வரத்தொடங்கிய நிலையில், 60,000ற்கும் மேற்பட்ட தமிழ் புலம்பெயர்ந்தோர் 110 முகாம்களில் வசித்து வருகின்றனர்.

2015 - 2016 காலப்பகுதியில் புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் உதவியுடன் 452 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பியுள்ளதாகவும்,  அதேபோல், 2014 - 2015 வரையான காலப்பகுதியில் 396 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பியுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Tamilwin / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.