2016-09-03 17:26:00

மனித வர்த்தகத்திற்கெதிரான காரித்தாஸ் கருத்தரங்கு


செப்.03,2016. போர், வறுமை மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி, கட்டாயமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், நைஜீரியாவில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம்.

இவ்வாறு ஆப்ரிக்காவில் ஆயிரக்கணக்கில் வயது வந்தவர்களும், சிறாரும் வெளியேறுகின்றனர் என்றும், இவர்கள், பல நேரங்களில், பாலியல் மற்றும் கட்டாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் காரித்தாஸ் கூறியது.

நைஜீரியக் காரித்தாஸின் ஒத்துழைப்புடன்,  இம்மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, நைஜீரியாவின் அபுஜாவில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், உகாண்டா, ஜிம்பாபுவே மற்றும் மாலி நாடுகளில், மனித வர்த்தகத்திற்கெதிரான திட்டங்களில் பணியாற்றி வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.

2015ம் ஆண்டில், அறுபது இலட்சம் மக்கள், அகதிகளாக அல்லது கட்டாயமாக வெளியேறியவர்கள்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.