2016-08-17 16:06:00

சிலுவையைப் பற்றி திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


ஆக.17,2016. "கடவுளின் இரக்கத்தை, சிலுவையின் வழியாக நாம் தொடமுடியும்; அதே இரக்கத்தால் நாம் தொடப்படுகிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியாயின.

இத்தாலியம், ஆங்கிலம், ஜெர்மன், இலத்தீன், அரேபியம் ஆகியவை உட்பட, ஒவ்வொரு நாளும், 9 மொழிகளில் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆகஸ்ட் 16ம் தேதி முடிய, @pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில், திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்திகள், 918 என்பதும், அவரது செய்திகளைத் தொடர்வோரின் எண்ணிக்கை, 97 இலட்சத்து, 7,098 என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், இவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலமைப் பணியை ஏற்றுக்கொண்ட நாளின் மூன்றாம் ஆண்டு நிறைவின்போது, @franciscus என்ற பெயரால் உருவாக்கப்பட்ட instagram செயலி வழியே, திருத்தந்தையின் செயல்பாடுகளைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகிவருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.