2016-08-15 15:45:00

வாழ்வுப் பயணத்தில் எப்போதும் நம்முடன் வரும் அன்னை மரியா


ஆக.15,2016. 'இறைவனின் மகிமையில் வாழும் அதேவேளை, நம் வாழ்வுப் பயணத்தில் எப்போதும் நம்முடன் கூட வரும் அன்னை மரியாவின் தாய்க்குரிய பாதுகாப்பில் உங்களனைவரையும் ஒப்படைக்கிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியா விண்ணேற்படைந்த விழாவையொட்டி, ஆகஸ்ட் 15, இத்திங்களன்று 9 மொழிகளில் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வுப் பயணத்தில் அன்னை மரியா நம்முடன் எப்போதும் துணை வந்து நம்மைக் காக்கிறார் என உரைத்துள்ளார்.

இதற்கிடையே, இப்புதனன்று மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிரான்ஸ் நாட்டு அரசுத் தலைவர் François Hollande அவர்கள், வத்திக்கானில் சந்திப்பார் எனவும், இது அவர்களுக்கிடையே நிகழும் ஒரு தனிப்பட்ட சந்திப்பாக இருக்கும் எனவும் திருப்பீட தகவல் துறை தலைவர், Greg Burke அவர்கள், இத்திங்களன்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.