2016-08-09 15:50:00

டெல்லியை பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும்


ஆக.09,2016. இந்தியத் தலைநகர் டெல்லியில், கடந்த நான்கு  ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளவேளை, டெல்லியை, பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் டெல்லி பேராயர் அனில் கூட்டோ.

டெல்லயில் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்செயல்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார் பேராயர் அனில் கூட்டோ.

இவ்வன்கொடுமைகளை நிறுத்துவதற்கு மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் கூட்டோ.

2012ம் ஆண்டுக்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர் என்று காவல்துறை கூறுவதாக, PTI செய்தி நிறுவனம், ஆகஸ்ட் 7, கடந்த ஞாயிறன்று கூறியது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.