2016-08-09 14:20:00

இது இரக்கத்தின் காலம் : நாய்க்குட்டிக்குத் தெரிந்த அளவு...


ஒரு வீட்டில் செல்லமாக வளர்ந்துவந்த நாய்குட்டியை, திடீரெனக் காணவில்லை. வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் மூழ்கினர். மனமுடைந்துபோன அவ்வீட்டின் தலைவர், தெருத் தெருவாகத் தேடினார்; தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரித்தார். இறுதியில், காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டு, மாலை தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்றும் கொடுத்தார்.

ஒரு மணி நேரத்தில், அந்த ஊரில் இருந்த முதியோர் இல்லத்திலிருந்து அவருக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. முதியோர் இல்லத்து பொறுப்பாளர் அவரிடம், "சார், நாய்குட்டி காணவில்லை என்று நீங்கள் தந்த விளம்பரத்தைப் பார்த்தோம். உங்கள் நாய்குட்டி இங்குதான் உள்ளது. உங்கள் அம்மாவோடு விளையாடிக் கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

வீட்டிலிருந்தவர்கள் தொலைத்த உறவை, தொலைந்துபோன நாய்க்குட்டி தேடிக் கண்டுபிடித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.