ஆக.08,2016. 'குடும்பங்களில் கலந்துரையாடல் இருக்கும்போது, பதட்டநிலைகளுக்கு எளிதாக தீர்வு கிட்டும்' என்ற செய்தியை இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 'பகைமையையும் அழிவையும் நாம் நன்மைத்தனம் கொண்டு எதிர்க்கிறோம். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும், நாமனைவரும் சகோதர சகோதரிகளே' என்ற வார்த்தைகளை இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Instagram இணையதள செயலியாகத் துவக்கப்பட்டு 20 வாரங்கள் கடந்துள்ள நிலையில், அதனை பார்வையிட்டோரின் எண்ணிக்கை 30 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக திருப்பீடத்தின் சமூகத் தொடர்புத் துறைச் செயலர் அருள்பணி Dario Viganò அவர்கள் தெரிவித்தார்.
திருத்தந்தையின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், பகைப்படங்களுடன் Instagram இணையதள செயலியில் வெளியிடப்படுகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |