2016-08-08 15:24:00

சிரியாவிற்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


ஆக.08,2016. மேலும், சிரியாவில் துன்புறும் மக்களுக்காக செபிக்குமாறு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக சிறார், இந்த மோதல்களில் பலியாகி வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலிமையுடையோர் தங்கள் இதயங்களை மூடி, அமைதிக்கான விருப்பத்தை புறக்கணிக்கும் இந்நிலை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார்.

சிரியாவின் துன்புறும் சகோதர சகோதரிகளுக்கான செபம் மற்றும் ஒருமைப்பாட்டின் வழியாக அவர்களுக்கு நெருக்கமாக நாம் செல்வோம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.