2016-08-06 17:34:00

ஏமனில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் நலமாக இருப்பதாக இந்திய அரசு


ஆக.06,2016. ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஏமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட சலேசிய சபை அருள்பணி Tom Uzhunnalil அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், அவரின் விடுதலைக்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தார், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ்.

அருள்பணி டாம் அவர்களின் குடும்பத்தினரை அண்மையில் சந்தித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா அவர்கள், இஸ்லாமிய குழுவால் கடத்தப்பட்ட அருள்பணியாளரின் விடுதலைக்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி கூறினார்.

இதற்கிடையே, அருள்பணி டாம் அவர்கள் குறித்து கருத்து வெளியிட்ட தெற்கு அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி, ஆயர் Paul Hinder அவர்கள், அருள்பணி டாம் அவர்களுடன் இதுவரை எவரும் நேரடியாக தொடர்புகொள்ள முடியாத நிலை தொடர்வதால், அவர் எப்படியுள்ளார் என்பது குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியவில்லை என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.