2016-08-05 14:58:00

அசிசி மன்னிப்பின் 8ம் நூற்றாண்டு நிறைவில் திருத்தந்தை


ஆக.05,2016. ஜூலை 4, இவ்வியாழன் பிற்பகல் 3 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானிலிருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன், அசிசி நகருக்குச் சென்று, அங்குள்ள  Porziuncula சிற்றாலயத்தில் செபித்தார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய Porziuncula சிற்றாலயத்தில், 1216ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2ம் தேதி, அப்புனிதர் பரவச நிலை அடைந்தபோது, சிற்றாலயத்திற்கு வருபவர்கள் அனைவரும், தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெறும் பரிபூரணப் பலனைப்  அடையவேண்டும் என இறைவனிடம் மன்றாடி, அந்த வரத்தைப் பெற்றதாக ஒரு மரபு உண்டு. 

இந்நிகழ்வின் 8ம் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்க அங்கு சென்ற திருத்தந்தை, சிற்றாலயத்தில் செபித்தபின், விண்ணகத் தூதர்களின் புனித மரியா பசிலிக்காவில் கூடியிருந்த மக்களுக்கு தியான உரை வழங்கினார்.

பின்னர் பசிலிக்காவுக்காவுக்கருகே உள்ள பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் வாழும் நோயுற்ற துறவியரைச் சந்தித்தார். இறுதியாக, பசிலிக்காவுக்கு எதிரே இருந்த வளாகத்தில் கூடியிருந்த மக்களை வாழ்த்தியபின், அங்கிருந்து புறப்பட்டு உரோம் நகர் திரும்பினார்.

தன் அசிசி நகர் பயணத்தின் நினைவாக, "இறைவனின் இரக்கம் எல்லையற்றது. மன்னிப்பு வேண்டும் மனதினை இறைவன் கண்ணோக்குகிறார்" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், இவ்வியாழன் மாலை பதிவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.