2016-07-27 15:53:00

போலந்து ஆயர்களுடன் திருத்தந்தையின் மனம் திறந்த உரையாடல்


ஜூலை,27,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் போது, ஜூலை 27, இப்புதன் மாலையில், போலந்து நாட்டு ஆயர்களை சந்திக்கும் வேளையில், தயாரிக்கப்பட்ட ஓர் உரையை வழங்குவதற்குப் பதில், அவர்களுடன் மனம் திறந்த ஓர் உரையாடலை மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உலக இளையோர் நாள் நிகழ்வையொட்டி, திருத்தந்தை மேற்கொள்ளும் பயணம் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், செய்தித் தொடர்பாளர், அருள்பணி ஃபெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களின் போதும், இதே முறையைப் பின்பற்றினார் என்று சுட்டிக் காட்டிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், இச்சந்திப்பின் போது, ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊடகங்களின் பார்வை இல்லாத வேளையில், உடன் ஆயர்களுடன் மனம் திறந்த ஓர் உரையாடலில் ஈடுபடுவது எளிதாக அமையும் என்பதை உணர்ந்த திருத்தந்தை இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பெட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.