2016-07-19 15:59:00

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வியட்நாம் கத்தோலிக்கர் பேரணி


ஜூலை, 19,2016. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வியட்நாம் கத்தோலிக்கர்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை அந்நாட்டில் நடத்தினர்.

தேசப்பற்றை வெளிப்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலை பாதுகாத்து, நீதிக்கும் உண்மைக்கும் சான்றுகாளாக விளங்கவேண்டும் என்ற கூற்றுடன் வியட்நாமின் Phu Yen பங்குதள மக்கள், அந்த ஊரைச் சுற்றி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

பெருமளவில் சிறார்களும் கலந்துகொண்ட இந்த அமைதிப் பேரணியில், ‘எங்கள் கௌரவத்தை விற்காதீர்கள், எங்கள் முன்னோர்களுக்கு துரோகமிழைக்காதீர்கள்' போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் தாங்கிச் செல்லப்பட்டன.

தொழில் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசுகேடு அடைவது, இத்தகைய தீமைகளைச் செய்வோர், அரசு உதவியுடன், தண்டிக்கப்படாமல் செல்வது, போன்றவற்றிற்கு எதிராக கத்தோலிக்கர்களின் இந்த ஊர்வலம் இடம்பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.