2016-07-13 15:49:00

பல்சமய உரையாடல் அவையும் Al-Azhar பல்கலைக்கழகமும்


ஜூலை,13,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், கெய்ரோ நகரில், Al-Azhar பல்கலைக்கழகத்தில், இப்புதனன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Al-Azhar பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், மதத் தலைவருமான Ahmad Al-Tayyib அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 23ம் தேதி வத்திக்கானுக்கு வருகை தந்து திருத்தந்தையைச் சந்தித்ததன் தொடர்ச்சியாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை அறிவித்துள்ளது.

இப்புதனன்று நடைபெற்ற இச்சந்திப்பில், ஆயர் Ayuso Guixot அவர்களுடன், எகிப்தின் திருப்பீடத்தூதர், பேராயர் Bruno Musarò அவர்களும் கலந்துகொண்டார்.

ஆயர் Ayuso Guixot அவர்களும், பேராயர் Bruno Musarò அவர்களும் இவ்வாண்டு பிப்ரவரி 16ம் தேதி, Al-Azhar பல்கலைக்கழகத்தின் இணைத்தலைவர், Abbas Shuman அவர்களை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.