2016-07-13 15:43:00

சமூகத் தொடர்பு திருப்பீட அவையின் உறுப்பினர்கள்


ஜூலை,13,2016. சமூகத் தொடர்புகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையில் பணியாற்ற, திருத்தந்தையால் நியமிக்கப்பட்டோரின் பட்டியல் ஒன்று, இப்புதனன்று வெளியானது.

கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் Leonardo Sandri, அருள் பணியாளர் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Beniamino Stella, மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai, மியான்மார் கர்தினால் Charles Maung Bo, ஆகியோர் இந்த அவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கென்யா, ஹெயிட்டி, அயர்லாந்து, பிரான்ஸ், வியட்நாம், ஸ்பெயின், இத்தாலி, லித்துவேனியா ஆகிய நாடுகளில் பணியாற்றிவரும் ஆயர்களில் சிலரும் இந்த அவையின் உறுப்பினர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்பியல், உளவியல், நன்னெறியியல், மதச் சுதந்திரம் ஆகியத் துறைகளில் பணியாற்றிவரும் பல்வேறு பொது நிலையினரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வவையின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

திருப்பீட தொடர்புத் துறையின் தலைவராக, அருள்பணி எதுவார்தோ விகனோ அவர்கள் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.