ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தனர். அவ்வழியேச் சென்ற ஒருவர், அங்கு நடந்த பணிகளை ஆர்வத்தோடு பார்த்தார். மரக்கட்டைகளைக் கொண்டு அழகிய வேலைப்பாடுகள் செய்து கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "தச்சு வேலை செய்கிறேன்" என்று ஆர்வமற்றதோர் பதில் வந்தது, அவரிடமிருந்து. கல்லில் அழகிய சிற்பம் ஒன்றை வடித்துக்கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று சலிப்புடன் பதில் சொன்னார், அந்தச் சிற்பி. அடுத்து, உண்மையிலேயே கல் உடைத்துக் கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, அவர் தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, "நான் ஓர் அரண்மனையைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அத்தொழிலைப்பற்றி ஒருவர் கொண்டிருக்கும் கண்ணோட்டம், உயர்வானதாக இருந்தால், செய்யும் தொழில் உயர்வடையும். எத்தொழில் யார் யார் செய்யினும், அத்தொழிலில் மேன்மை காண்பது அறிவு.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |