ஜூன்,15,2016. “வயது முதிர்ந்த அன்பு நண்பர்களே, கடவுள் உங்களைக் கைவிடவில்லை, அவர் உங்களோடு இருக்கிறார். அவரின் உதவியைக் கொண்டு, உங்கள் மக்களின் நினைவாக இருக்கிறீர்கள் மற்றும் அவ்வாறு தொடர்ந்து இருப்பீர்கள்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இப்புதனன்று வெளியிடப்பட்டன.
ஜூன் 15, இப்புதனன்று, கடைப்பிடிக்கப்பட்ட வயது முதிர்ந்தோர் எதிர்நோக்கும் உரிமை மீறல்கள் குறித்த உலக விழிப்புணர்வு தினத்தைப் பற்றியதாக திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும் அமைந்துள்ளது.
மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது குருத்துவ அருள்பொழிவின் 65வது ஆண்டு நிறைவை, இம்மாதம் 28ம் தேதி, வத்திக்கானின் கிளமெந்தின் அறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து சிறப்பிப்பார்.
இது குறித்து அறிவித்துள்ள ராட்சிங்கர் நிறுவனம், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனியின் ஃப்ரெய்சிங் பேராலயத்தில், 1951ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்றும், இவ்விழா ஜூன் 28ம் தேதி அப்போஸ்தலிக்க மாளிகையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |