2016-06-10 15:53:00

இது இரக்கத்தின் காலம்...: திருடனும் ஓட்டைக் கிண்ணமும்!


துறவி ஒருவர் ஒருமுறை தன் சீடர்களுடன் காட்டில் தங்கினார்.

அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திருடன் ஒருவன் அவர்களிடமிருந்த கிண்ணம் ஒன்றைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான்.

தற்செயலாக விழித்துக் கொண்ட சீடர் ஒருவர், கிண்ணத்துடன் திருடன் ஓடுவதைக் கண்டு, துறவியை எழுப்பி விடயத்தைக் கூறினார். கிண்ணம் இருந்த இடத்தைப் பார்த்த துறவி, ""அடடா, அவன் ஓட்டைக் கிண்ணத்தை அல்லவா தூக்கிக் கொண்டு ஓடுகிறான்! நீ ஓடிச் சென்று அவனிடம் இந்த நல்ல கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு வா...'' என்றார். சீடரும் கிண்ணத்துடன் ஓடிச்சென்று திருடனை நெருங்கிப் பிடித்தார். பின்னர், துறவியின் விருப்பத்தைச் சொல்லி, நல்ல கிண்ணத்தை அவனிடம் கொடுத்தார். துறவியின் அன்பு மொழிகள் திருடனின் மனத்தை மாற்றிவிட்டன. அவன் உடனே திரும்பி வந்து, அத்துறவியின் சீடனாகி விட்டான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.