2016-05-31 15:57:00

இந்து இளைஞருக்கு, கத்தோலிக்க ஆயர் சிறுநீரகம் தானம்


மே,31,2016. கேரளாவின் பாலை மறைமாவட்ட துணை ஆயர் ஜேக்கப் முரிக்கன் அவர்கள், தனது ஒரு சிறுநீரகத்தை, ஓர் ஏழை இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் தானம் செய்யத் தீர்மானித்துள்ளார் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறியது.

52 வயது நிரம்பிய கத்தோலிக்க ஆயர் முரிக்கன் அவர்கள், முப்பது வயது நிரம்பிய E. Sooraj என்பவருக்குத் தனது ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்வதற்குரிய மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துள்ளார்.

கொச்சி மருத்துவமனையில் ஜூன் 01, இப்புதனன்று சிறுநீரகத் தானம் அறுவை சிகிச்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா வைத்திய சாலையில் வேலைசெய்யும் Sooraj என்பவர், தனது தாய் மற்றும் மனைவியைப் பராமரிக்கும் கடமையைக் கொண்டுள்ளார். இவர் ஒருவரே அவரின் குடும்பத்தில் வேலை செய்பவர்.

ஆதாரம் : Times of India / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.