2016-05-23 14:50:00

சிதைந்துள்ள உலகில் இரக்கத்தோடு இருப்பது


மே,23,2016. “சிதைந்துள்ள ஓர் உலகில், இரக்கத்தோடு இருப்பது என்பது, இறைவனின் குழந்தைகளுக்கு இடையே நெருக்கம் உருவாவதற்கு உதவுவதாகும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியாயின

திருத்தந்தையின் இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்தியாக, "மூவோர் இறைவன் பெருவிழா, இறைவனோடும், அனைத்து மக்களோடும், ஒன்றித்து வாழ்வதற்கான நம் பணியை புதுப்பிக்கின்றது" என்ற வார்த்தைகள் வெளியாயின.

மேலும், இத்தாலிய ஊழலுக்கெதிரான தேசிய அமைப்பின்(ANAC) தலைவர் Raffaele Cantone, உரோம் மாநகராட்சியின் சிறப்பு அவைத் தலைவர் Francesco Paolo Tronca, ஆல்இத்தாலியா விமானச் சேவைத் தலைவர் Luca Cordero di Montezemolo ஆகியோரையும், அவரவர் பிரதிநிதிக் குழுக்களுடன் தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.