2016-05-11 15:46:00

ஊடகத் தொடர்பு உலக நாளுக்கு, திருத்தந்தை வாழ்த்து


மே,11,2016. மே 8 கடந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட ஊடகத் தொடர்புகள் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பகல் அல்லேலூயா வாழ்த்துரை நேரத்தில், ஊடகவியலாளர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அத்துடன், திருத்தந்தை அவர்கள், கைப்பட எழுதியிருந்த ஒரு வாழ்த்துச் செய்தி, அவரது டுவிட்டர், இன்ஸ்டக்ராம் தளங்கள் வழியே வெளியிடப்பட்டது.

"எனது செபத்தையும், ஆசீரையும் விரும்பிக் கேட்டிருக்கும் பெரும் டிஜிட்டல் சமுதாயமான உங்களுக்கு நான் கூற விழைவது இதுவே: தந்தையிடம் நான் எழுப்பும் செபத்தில், நீங்கள் மதிப்புள்ள ஒரு கொடையாக விளங்குவீர்கள்.

எனக்காகச் செபிக்க மறவாதீர்கள். இரக்கத்தின் நற்செய்திக்கு ஒரு பணியாளனாக நான் இருப்பதற்கு செபியுங்கள்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை, இத்தாலிய மொழியில் தன் கைப்பட எழுதி, வெளியிட்டிருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.