2016-05-10 16:11:00

உலகளாவிய ஒருமைப்பாட்டிற்கு பெண் துறவு சபைகள் அர்ப்பணம்


மே,10,2016. உலகின் ஏறத்தாழ ஐந்து இலட்சம் அருள்சகோதரிகளின் பிரதிநிதிகளாக, பெண் துறவு சபைகளின் தொள்ளாயிரம் தலைவர்கள், இத்திங்களன்று ஐந்து நாள் கூட்டத்தை உரோம் நகரில் தொடங்கியுள்ளனர்.

UISG என்ற, அனைத்துலக துறவு சபை தலைவர்கள் அமைப்பு நடத்தும் இந்த ஆண்டுக் கூட்டம், அவ்வமைப்பு தொடங்கப்பட்டதன் பொன் விழாவையும் சிறப்பிக்கின்றது.

மே 12, வருகிற வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இக்கூட்டத்தினர் சந்திப்பார்கள். மேலும், இவ்வுலகின் தற்போதைய முக்கிய விவகாரங்கள், குறிப்பாக, உலகில் தொடர்ந்து இடம்பெறும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்வதில், பெண் துறவு சபைகளின் பங்கு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அருள்சகோதரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு குறித்து இக்கூட்டத்தில், இத்திங்களன்று பேசப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.