2016-05-07 15:09:00

சமூகத் தொடர்பும், இரக்கமும் : ஒரு பலனுள்ள சந்திப்பு


மே,07,2016. "அன்பு, தன் இயல்பிலே தொடர்பைக் கொண்டது, அது திறந்த மனநிலைக்கும், பகிர்வுக்கும் இட்டுச் செல்கிறது" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார்.

மேலும், மே,08, இஞ்ஞாயிறன்று ஐம்பதாவது சமூகத் தொடர்பு நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியும், தொடர்பு பற்றியதாக உள்ளது.

“சமூகத் தொடர்பும், இரக்கமும் : ஒரு பலனுள்ள சந்திப்பு” என்ற தலைப்பில், இந்த உலக நாளுக்கென, கடந்த சனவரி 24ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தார் திருத்தந்தை.

இன்னும், சுவிஸ் கூட்டமைப்பின் (Helvetic) அரசுத்தலைவர் Johann Schneider-Ammann அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.