2016-04-30 14:01:00

வேலை, மனிதரின் மாண்பை வெளிப்படுத்துகின்றது


ஏப்.30,2016. "வேலை, மனிதருக்கு உகந்தது; கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதரின் மாண்பை வெளிப்படுத்துகின்றது" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

மே 1, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வேலையின் முக்கியத்துவத்தை, தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், அன்னை மரியாவுக்குச் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், நற்செய்தி அறிவிப்பு மற்றும் அமைதிக்காக, குடும்பங்களும், குழுக்களும், சமூகங்களும் செபமாலை செபிக்குமாறு கேட்டுள்ளார்  திருத்தந்தை.

உலகில், ஒவ்வொரு நாட்டிலும், பெண்கள் மதிக்கப்பட்டு, கவுரவிக்கப்படவும், சமுதாயத்திற்கு அவர்களின் முக்கிய பங்களிப்பு மேலாக மதிக்கப்படவும் வேண்டுமென்று செபிக்குமாறும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.