2016-04-30 14:28:00

வேதிய ஆயுதங்கள், போர்க் கருவிகளாக மீண்டும் எழுந்துள்ளன


ஏப்.30,2016. உலகை வேதிய ஆயுதங்கள் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 29, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, வேதிய ஆயுதப் போரில் பலியானவர்களை நினைவுகூரும் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில், வேதிய ஆயுதங்கள், போர்க் கருவிகளாக மீண்டும் உருவெடுத்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

1997ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி, வேதிய ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதில் 192 நாடுகள் இணைந்துள்ளன. உலகில், சேமிப்பிலுள்ள இந்த ஆயுதங்களில் 90 விழுக்காடு அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.