2016-04-28 16:21:00

திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்த முயற்சி


ஏப்ரல்,28,2016. சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரில், இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கு உதவிகள் செய்யும் ஒரு  முயற்சியை, கத்தோலிக்கத் திருஅவையும், மாஸ்கோவின் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த இணை செயல்பாட்டின் ஒரு பகுதியாக, இவ்விரு அமைப்பின் பிரதிநிதிகள் ஹோம்ஸ் நகரை அண்மையில் பார்வையிட்டனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

சிரியா நாட்டில் நிலவிவரும் போரினால் சேதமடைந்துள்ள கிறிஸ்தவ தலங்களை மறு சீரமைக்கும் பணியில் கத்தோலிக்கத் திருஅவையும், மாஸ்கோவின் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து செயலாற்றுவதுபோல், இம்முயற்சியிலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை அழிவுகளையும், மரணங்களையும் கண்முன்னே கண்டுள்ள சிறுவர் சிறுமியர், இன்னும் புன்னகைப் பூக்க முடிகிறது என்பது, நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று, இரஷ்யப் பேராயர் Paolo Pezzi அவர்கள், Aid to the Church in Need அமைப்பினரிடம் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து செயலாற்றுவது, வெறும் ஏட்டளவு ஒப்பந்தம் அல்ல, மாறாக, நடைமுறையில் காணக்கூடிய ஓர் உண்மை என்று, இந்த குழுவின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.