ஏப்ரல்,28,2016. செர்னோபில் (Chernobyl) நகரில் ஏற்பட்ட அணு உலை விபத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர், தங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பதற்கு, இத்தாலியில் கோடை விடுமுறையைக் கழிப்பதற்கு, Girotondo எனப்படும் பிறரன்பு அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் நடைபெற்ற இந்த அணு உலை விபத்தின் 30ம் ஆண்டு நிறைவு கடந்த செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டது.
இத்தாலியின் தூரின் நகரில் துவங்கப்பட்ட Girotondo எனப்படும் பிறரன்பு அமைப்பினால், ஒவ்வோர் ஆண்டும், செர்னோபில் குழந்தைகள், கோடை விடுமுறையைக் கழிப்பதற்கு, இத்தாலியக் குடும்பங்கள் உதவி செய்து வருகின்றன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இத்தகைய முயற்சியின் வழியே இத்தாலியக் குடும்பங்கள் இச்சிறுவர், சிறுமியருக்கு வழங்கக்கூடிய உதவிகளைவிட, இக்குழந்தைகள் இக்குடும்பங்களுக்கு வழங்கும் பயன்கள் பெரிதானவை என்று, Girotondo அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், ஆசிய செய்தியிடம் கூறினார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |