2016-04-27 16:24:00

செர்னோபில் அணுமின் நிலைய விபத்து கற்றுத்தரும் பாடம்


ஏப்.27,2016. செர்னோபில் அணுமின் நிலைய விபத்து, அழிவைக்கொண்டுவரும் தொழில்நுட்பங்களைப் புறக்கணித்து, நம் எல்லாருக்கும் மேலானவராக இருக்கும் கடவுளுக்குப் பணிந்து நடப்பதற்கு, பாடம் கற்றுத் தந்துள்ளது என்று, கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார்.

உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் அணுமின் நிலைய விபத்து நடந்ததன் முப்பதாம் ஆண்டு நிறைவை, இச்செவ்வாயன்று நினைவுகூர்ந்து செய்தி வெளியிட்டுள்ள, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், இந்த விபத்தை நாம் என்றுமே நினைவில் வைத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கடும் விளைவுகளை நினைவில் வைத்துள்ள நாம், நம் தவறுகளின் விளைவுகளையும் மறக்கக் கூடாது என்றும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ.

மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமான அணு விபத்தாக, செர்னோபில் விபத்து கருதப்படுகிறது. 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி இது நடந்தது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.