2016-04-14 15:27:00

நேர்காணல் – அ.பணி லூயி லெவே சே.ச – ஆயர் செ.சூசைமாணிக்கம்


ஏப்.14,2016. தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில், சின்ன அருளானந்தர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் இயேசு சபை அருள்பணி லூயி லெவே அவர்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், தனது 24வது வயதில், 1908ம் ஆண்டில் இந்தியா வந்தார். சிவகங்கை மறைமாவட்டத்திலே தனது இறப்புவரை, அதாவது 1973ம் ஆண்டு (21.03.1973) வரை ஆன்மீகப் பணியாற்றினார். இயேசு சபை அருள்பணி லூயி லெவே அவர்கள், இந்தியா வந்த பின்னர், தனது தாயகமான பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லவே இல்லை. இம்மாமனிதரை புனிதர் என்ற நிலைக்கு உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணிகளை சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் கடந்த மார்ச் 17ம் தேதி சருகணியில் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்நிகழ்வு பற்றி ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் தொலைபேசி வழியாகப் பேசுகிறார்.








All the contents on this site are copyrighted ©.