2016-04-12 15:40:00

செபிப்பதற்கு கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம்


ஏப்.12,2016. "விசுவாசத்தின் அழகைப் பாராட்டுவதற்கும், செபிப்பதற்கும், நமக்கு அடுத்திருப்பவர்க்குப் பணியாற்றுவதற்கும் கற்றுக்கொள்ளும் இடமாக குடும்பம் அமைந்துள்ளது(287); செபம், தங்களின் பெற்றோர்க்கு, உண்மையிலேயே முக்கியமானதாக இருப்பதை, பிள்ளைகள் பார்ப்பது அவசியம்(288) என்பவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இச்செவ்வாய் காலையில்   வெளியிடப்பட்டன.

“புரிந்துகொள்தல், மன்னித்தல், உடனிருத்தல் போன்ற மனப்போக்கே, திருஅவையில் மேலோங்கியிருக்க வேண்டும்(312); எவ்விதப் பாகுபாடுமின்றி, எல்லாரிடமும் சென்ற இறைமகனின் நடைமுறைப் பண்பே, திருஅவையின் பண்பாக இருக்க வேண்டும்(309)" என்பவையும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளாக இச்செவ்வாய் மாலையில் வெளியிடப்பட்டன.

@Pontifex  என்ற முகவரியில், வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், இந்நாள்களில், அன்பின் மகிழ்வு(Amoris Laetitia)” என்ற அவரின் திருத்தூது அறிவுரை மடலிலிருந்து வெளியிடப்படுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.