2016-04-11 15:44:00

ராயகடா புதிய மறைமாவட்டம், புதிய ஆயர் Aplinar Senapati


ஏப்.11,2016. இந்தியாவில், ராயகடா புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் முதல் ஆயராக, அருள்பணி Aplinar Senapati அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெர்ஹாம்பூர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ள புதிய ராயகடா மறைமாவட்டத்தின் முதல் ஆயர் Aplinar Senapati அவர்கள், பெர்ஹாம்பூர் மறைமாவட்டத்திலுள்ள, சுரதாவில் 1960ம் ஆண்டு பிறந்தவர். மறைபோதக சபையைச் சேர்ந்த இவர், புவனேஷ்வர், Utkal பல்கலைக்கழகத்தில் பொருளியியல் மற்றும் மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்.

1988ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட ஆயர் Aplinar Senapati அவர்கள், உதவிப் பங்குத் தந்தை, பங்குத் தந்தை, நவதுறவியர் பயிற்சியாளர் என, பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர், 2014ம் ஆண்டிலிருந்து, குவாஹாத்தி உயர்மறைமாவட்டத்திலுள்ள Derapatharல், பங்குத் தந்தையாகவும், ஆங்கிலவழிக் கல்விப் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.